Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

ஹயக்ரீவர் கோவிலில் ஏகாதசி தினமான வியாழக்கிழமை (29/1/2026) சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நாளில் உற்சவர் அழகிய அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார்.
காலை முதலே கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. மலர்கள், பட்டு ஆடைகள் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து, பிரார்த்தனை செய்தனர்.
ஏகாதசி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம் பக்தர்களால் நிரம்பியது. பூஜைகளுக்குப் பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து, விழாவை சீராக நடத்தினர்.

படம் – RVR 

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM