| ச வெங்கடேஸ்வரன் |
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவிலில் விசேஷமாக ‘விஷு கனி’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலையாளத்தில் ‘கனி’ என்பது ‘முதலில் பார்ப்பது’ என்று பொருள். அதன்படி, “விஷுகனி” என்பது புத்தாண்டு நாளில் முதலில் காணும் புனித காட்சி எனப் பொருள் தருகிறது.
புத்தாண்டு தினமான அன்று காலை 6 மணி முதல், அம்பாள் மண்டபத்தில் அம்பாள் படத்தின் முன்பு அழகிய கோலங்களுடன் விஷுகனி அலங்காரம் செய்யப்படும். இதில் விளக்கு, பழங்கள், பூக்கள், மஞ்சள் கிழங்கு, அரிசி, பருப்பு, புதிய உடைகள், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி, புத்தகங்கள் மற்றும் நாணயங்கள் போன்ற மங்கள பொருட்கள் ஒழுங்காக வைக்கப்படும்.
பக்தர்கள் புத்தாண்டு நாளில் கோவிலுக்கு வந்து இந்த விஷுகனியை தரிசித்து, அம்பாளையும் பெருமாளையும் வழிபட்டு, புத்தாண்டில் நல்ல அதிர்ஷ்டமும் வளமும் பெறலாம். மேலும், வழக்கப்படி பக்தர்களுக்கு ரூபாய் நாணயங்களும் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு: 99625 14134




