ஆடிப்பூரம் திருநாளை முன்னிட்டு, ஆதம்பாக்கம் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் கோவில் வளாகத்தில் அன்னை சாரதாம்பாள் சிறப்பு முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வளையல்களின் அழகிய அலங்காரத்தில் காட்சி அளித்த அன்னை சாரதாம்பாளை ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர். ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு அலங்காரம் பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.




