| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயார் ஊஞ்சல் சேவை பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையான ஜூலை 17, 24, 31 ஆகிய தேதிகளில் மாலை நடைபெறும் இந்த உற்சவத்தில், ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜைகள், ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் உள்ள புறப்பாடு நடைபெற்று வந்தன. பின் பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்று வருகிறது, கடைசி வெள்ளியான ஆகஸ்ட் 7ம் தேதி காலை 9.30 மணியளவில் தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின் மாலை ஸ்ரீ மஹாலக்ஷ்மி விசேஷ சாத்துப்படியில் திருவடி சேவை நடைபெறவுள்ளன, ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







