தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நங்கநல்லூர் 2வது மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் ஸ்ரீ ராமானுஜர் அழகாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.
இந்த நன்னாளை முன்னிட்டு கோவில் முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஸ்ரீ ராமானுஜர் சிறப்பான அலங்காரத்துடன் கண்கொள்ளாக் காட்சி அளித்தார்.
பல பக்தர்கள் கோவிலுக்கு வந்து, பெருமாள் மற்றும், ஸ்ரீ ராமானுஜரையும் தரிசித்து தமிழ் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
நங்கநல்லூர் வாழ் பக்தர்களுக்கு இந்நிகழ்வு மகிழ்ச்சியையும் பக்தி உணர்வையும் அளித்தது.
பட உபயம்: RVR




