| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் ஆலயத்தில் ஸ்ரீ சுதர்சன ஜெயந்தி விழா ஜூன் 23 மற்றும் 24 ஆகிய இரு நாட்களில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு முதல் நாள் இரவு ஸ்ரீ சுதர்சனருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஜூன் 23 அன்று காலை ஸ்ரீ சுதர்சனர் சமஷ்டி சகஸ்ரநாம அர்ச்சனை, கலச பிரதிஷ்டை மற்றும் மகா ஜெபம் நடைபெற்றது. மாலையிலும் மீண்டும் மகா ஜெபம் நடைபெற்றது. தொடர்ந்து 1,008 ஆவர்த்தி ஜெபம் பக்தர்களின் பங்கேற்புடன் நிறைவு பெற்றது.





