| ச வெங்கடேஸ்வரன் |
ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கந்த சஷ்டி பாராயணம் 36 முறை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு இறைபக்தியுடன் பிரார்த்தனை செய்தனர்.
இன்று தைப்பூசம் தினத்தை முன்னிட்டு, ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தில் தைப்பூச விழா மிகச் சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெற உள்ளது. சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்பெற உள்ளனர்.





