ஆதம்பாக்கத்திலுள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தில் வருகின்ற 6.2.2026 தை வெள்ளிக்கிழமையன்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறும். அனைத்து மகளிரும் பங்குபெறலாம். கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
பங்கு கொள்ள விரும்புவோர் ஆலயத்திலே முன்கூட்டியே தங்களுடைய பெயரை முன்பதிவு செய்யுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் பங்கு கொள்ள விரும்புவர்கள் தங்களுடன் ஒரு சிறிய குத்துவிளக்கு, கை மணி, பஞ்ச பாத்திரம், உத்திரணி, சூடத்தட்டு மற்றும் ஒரு தேங்காய் எடுத்து வருமாறு ஆலய செயலாளர், 𝘔. ரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
மேலும் விவரங்களுக்கு, ஆலய செயலாளர் அலைபேசி எண் 9444053516 தொடர்பு கொள்ளலாம்.
ஆலயம் – 044/35506863 / 9342541870




