Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூரில் உள்ள ரோட்டரி சென்ட்ரல் மார்கரெட் சிட்னி மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருணரோக கணபதி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா ஜனவரி 28ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
இந்த புனித கும்பாபிஷேகம் வேத ஆகம விதிப்படி முறையாக நடத்தப்பட்டது. இதில் பல குடியிருப்பு வாசிகள் , மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மேலும், அபிராமி ராமநாதன் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். கோவில் மற்றும் மருத்துவமனை வளாகம் முழுவதும் அமைதியும் பக்தியும் நிறைந்த சூழல் நிலவியது.
மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் மனநிறைவுடன் விநாயகரின் அருளைப் பெற்றனர்.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM