Neighborhood Speaks

| ச வெங்கடேஸ்வரன் |

நங்கநல்லூர், தில்லைகங்கா நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லஷ்மி சமேத ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் திருக்கோயிலில் இந்த ஆண்டு 31வது பிரம்மோற்சவம் கடந்த 7ம் தேதி (சனிக்கிழமை) முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழா 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற உள்ளது.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் மற்றும் பிரசாத விநியோகம் நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் போது, ஸ்ரீ ராஜகோபால சுவாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஏற்கனவே 10ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கருட சேவை மற்றும் 12ம் தேதி (வியாழக்கிழமை) நாச்சியார் திருக்கோலம் பக்தர்களின் திரளான பங்கேற்புடன் நடைபெற்றது. 14ம் தேதி (சனிக்கிழமை) திருத்தேர் உற்சவமும் சிறப்பாக நடைபெற்றது.

இன்னும் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளாக 16ம் தேதி (திங்கட்கிழமை) தீர்த்தவாரி மற்றும் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கும்ப ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது.

திருவிழா தொடர்பான மேலும் தகவல்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணன் – 99625 14134 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இப்புனித பிரம்மோற்சவத்தில் பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு இறை அருளைப் பெற்றுச் செல்லுமாறு கோவில் நிர்வாகம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.

WhatsApp Image 2026-01-17 at 1.37.56 PM