| ச வெங்கடேஸ்வரன் |
நங்கநல்லூரில் உள்ள ஸர்வமங்களா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தில் நவமி தினத்தை முன்னிட்டு ராம நாம ஜபம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி மார்ச் 12, வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆசிரமத்தின் அம்பாள் மண்டபத்தில் நடைபெறும்.
ஒவ்வொரு நவமி தினத்திலும் பக்தர்கள் ஒன்றுகூடி ‘ஸ்ரீராம’ நாமத்தை ஜபிக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ராம நாமத்தை ஜபிப்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஜபித்ததற்கு சமம் என்று கூறப்படுகிறது. மேலும் கம்பராமாயணத்தில் ராம நாமத்தின் மகிமை சிறப்பாகப் புகழப்பட்டுள்ளது.
ராம நாமத்தை ஜபிப்பதால் நன்மை, செல்வம், மன அமைதி கிடைக்கும் என்றும், பாவங்கள் நீங்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நவமி ராம நாம ஜபத்தில் அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு ஸ்ரீராமரின் அருள் பெற ஆலய நிர்வாகத்தால் அழைக்கப்படுகிறார்கள்.




