| ச வெங்கடேஸ்வரன் |
வைகாசி முதல் நாளான மே 15ம் தேதியன்று விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முன்னிட்டு, நங்கநல்லூர் தில்லைகங்கா நகர் ஸ்ரீ சத்யநாராயண பெருமாள் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். இந்த அரிய புண்ணிய காலம் அதிகாலை 1.30 மணி முதல் காலை 10.30 மணி வரை கடைப்பிடிக்கப்படுவதாக கூறப்படுகிறது.





